Pages

Friday 17 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-4)



மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-4)



அன்பார்ந்த வாசகப் பெருமக்களே வணக்கம்,



இந்தப் பதிவில் 29-௦02-1976 அன்று காலை 11.00 க்கும் 02-03-1976 அன்று அதிகாலை 5.30 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை ஆராய்வோம்.



இந்த காலகட்டத்தில் குருவும் கேதுவும் ஒரே ராசியில் ஒன்றை நோக்கி ஒன்றாக அமைந்துள்ளது. அனால் இருவருக்கும் இடைப்பட்ட வித்தியாசம் சுமார் 210 இப்படியான அமைவு ஆண் பெண் இருபாலருக்கும் என்ன குறை இருக்கிறது என்பதை கண்டு பிடிப்பது கடினம்.

சுக்கிரன் செவ்வாய் திரிகோண அமைவு பெற்றிருக்கிறது எனவே இவ்விரண்டையும் தனியே வரிசைப் படுத்திப் பார்க்கும் போது சுக்கிரனை அடுத்து செவ்வாய் இருக்கிறது. இருவருக்கும் இடைப்பட்ட வித்தியாசம் 120 பாகை. இப்படிப்பட்ட அமைவு பெண்ணுக்கு சூதக வலி (மாதவிடாயின் போது வயிற்றுவலி) ஏற்படும். ஆணுக்கு உற்பத்தி செய்யப்பட்ட விந்தணு தொகுப்பின் உயிர் தன்மை அல்லது வாழும் தன்மை குறைவாக இருக்கும்



இனி மேற்படி இரண்டு கால கட்டத்திற்கு இடைப்பட்ட காலத்தில் (௦01-03-1976 – 8.30 AM) பிறந்த ஒரு ஆணின ஜாதகத்தை ஆராய்வோம். (110 35’ வடக்கு ; 770 52’ கிழக்கு)



இந்த ஜாதகத்தில் உள்ள குரு சுக்கிரனை முன்பே பார்த்துவிட்டோம்.



இனி 3 ம் பாவம் ஆரம்பமுனையை (ரிஷபத்தில் 180 38’) ஆராய்வோம் 3 ம் பாவ ஆரம்ப முனை ரோகினி நட்சத்திரத்தில் உள்ளது. ரோகினியின் அதிபதி சந்திரன். சந்திரன், சூரியன், புதன், ராகு ஆகியவற்றுடன் திரிகோண அமைவைப் பெற்றுள்ளது.



இந்த நன்கு கிரகங்களையும் வரிசைப் படுத்த



புதன் 010 37’

சூரியன் 170 14’

சந்திரன் 180 44’

ராகு 210 32’ என்ற வரிசையில் அமைந்துள்ளது



இந்த அமைவின்படி 3 ம் அதிபதி சந்திரனும் ராகுவும் சுமார் 20 பாகை வித்தியாசத்தில் எதிர் எதிராக அமைகிறது. இந்த அமைவு ஆண் பெண் இருபாலருக்கும் சுக்கில சுரோணித உற்பத்தியில் குறை நிச்சயமாக இருக்கும். இந்த குறைபாடு மருத்துவத்தால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் தீர்க்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.

Wednesday 15 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-3)

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-3)

அன்பான வாசகப் பெருமக்களே வணக்கம்.

கடந்த பதிவில் ஒரு பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு செய்யலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

17-12-1978  அன்று பிற்பகல் 2-00 க்கும் 19-02-1978  அன்று இரவு 11.00 க்கும் இடைப்பட்ட காலத்தில் 770 54’ (கிழக்கு) ; 110 46’ (வடக்கு)  இந்தப் பெண் பிறந்திருக்கிறார்.



 இந்தப்பெண் கும்ப லக்கினத்தில் (160 25’) பிறந்திருக்கிறார்.

ஐந்தாம் பாவ ஆரம்ப முனை மிதுனத்தில் 120 47ல் அமைந்துள்ளது. அதாவது திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. இந்த ராகுவுடன் திரிகோண அமைவு பெற்ற கிரகங்கள் எதுவும் இல்லை. மேலும் ராகு அடுத்துள்ள சனியை நோக்கி நகர்கிறார். சனி ராகுவுக்கு நட்பு கிரகம் எனவே ராகு கெடவில்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. காரணம் ராகு கண்ணியில் அஸ்த்தம் நட்சத்திரத்தில் இருக்கிறார். அஸ்த்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். ராகுவும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் பகை.

அடுத்து குடும்பத்திற்கு புது வரவை குறிக்கும் 2 மிடத்தை ஆராய்வோம்.

இந்த ஜாதகத்தில் 2 மிடம் ஆரம்ப முனை மீனத்தில் (160 49ல்) ரேவதி நட்சத்திரம் 1 ம் பாதத்தில் அமைந்துள்ளது. ரேவதியின் அதிபதி புதன். இந்த புதன், சூரியன், குரு, சந்திரன், சுக்கிரன் செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் திரிகோண அமைவு பெற்றுள்ளது. இவற்றை அந்தந்த ராசிகளில் கடந்துள்ள பாகை கலை அடிப்படையில் வரிசைப் படுத்த

குரு (மிதுனத்தில்) 030 47
சூரியன் (கும்பத்தில்) 050 33
சந்திரன் (மிதுனத்தில்) 090 03
புதன் (கும்பத்தில்) 090 31
சுக்கிரன் (கும்பத்தில்) 100 34
செவ்வாய் (மிதுனத்தில்) 280 09என்று அமையும்.

இந்த வரிசைப்படி புதன் சந்திரன் இருவரும் ஒரே பாகையில் சில விகலை இடைவெளியில் அமைந்துள்ளது. இந்த அமைவு சந்திரனுடன் சமாஹம நிலை எனப்படும். புதன் சந்திரன் இருவரும் பகையாக இருந்து, புதன் சந்திரனுடன் சமாஹம நிலையையும் அடைந்துள்ளதாலும், சூரியனில் சுமார் 4 பாகை இடைவெளியில் புதன் அஸ்தங்கமும அடைந்துள்ளதாலும் குடும்பத்திற்கு ஒரு புதிய சேர்க்கை ஏற்படுவதில் தடை உள்ளது.

வாழ்க வளமுடன்

அடுத்தப் பதிவில் வேறு ஒரு தம்பதியினரின் ஜாதகங்களை ஆராய்வோம்.

Monday 13 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-2)

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-2)

கடந்த பதிவில் ஒரு ஆணின ஜாதகத்தை ஆய்வு செய்தோம். இந்த பதிவில் அவருடைய மனைவியின் ஜாதகத்தை ஆய்வு செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு முன்பாக இந்தப் பெண் பிறந்ததற்கு முன்பின் நாட்களில் பொதுவான (லக்கினமில்லாமல்) கிரக அமைப்பைப் பார்க்கலாம்.

 அதாவது 17-12-1978 அன்று பிற்பகல் 2-00 க்கு ஒரு கட்டமும் 19-02-1978 அன்று இரவு 11.00 க்கு ஒரு கட்டமும் தந்திருக்கிறேன்.



இவ்விரண்டு காலகட்டத்திலும் குரு மற்றும் சுக்கிரன் இருவரையும் ஆராய்வோம். 

குரு சுக்கிரன் இருவரும் புதன் சூரியன் செவ்வாய் சந்திரன் ஆகிய கிரகங்களுடன் திரிகோண அமைவு பெற்றுள்ளதை கவனிக்கவும். இவர்கள் அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை அடிப்படையில் வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது கீழ்க்கண்டவாறு அமையும்.

17-02-1978 / 2.00.PM               19-02-1978 / 11.00.PM

சந்திரன் (மிதுனத்தில்) 000 28      குரு (மிதுனத்தில்) 030 46
குரு (மிதுனத்தில்) 030 47          சூரியன் (கும்பத்தில்) 070 14
சூரியன் (கும்பத்தில்) 040 50       புதன் (கும்பத்தில்) 120 23
புதன் (கும்பத்தில்) 080 18          சுக்கிரன் (கும்பத்தில்) 120 39
சுக்கிரன் (கும்பத்தில்) 090 40       செவ்வாய் (மிதுனத்தில்) 270 43
செவ்வாய் (மிதுனத்தில்) 280 19     சந்திரன் (மிதுனத்தில்) 290 06

என்ற வரிசையில் கிரகங்கள் அமைந்திருக்கும்.

குருவுக்கும் சூரியனுக்கும் இடையில் குறைந்த பட்சம் 1 பாகையும் அதிகபட்சம் 3½ பாகை வரையும் வித்தியாசம் இருக்கிறது.இப்படியான அமைப்பை நாடி விதிப்படி சூரியனில் அஸ்தங்கம் என்று கூறப்படும். குரு அஸ்தங்கம் ஆனதால் குரு வலிமை குன்றி இறக்கிறார்.

இப்படியான அமைவு ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகர் ஆணாக இருந்தால் சுக்கிலம் புத்திர உற்பத்திக்கு ஏற்ற வகையில் இருக்காது. இந்த குறைபாட்டை கண்டுபிடிப்பது கடினம்.

அடுத்து சுக்கிரனை ஆராய்வோம். சுக்கிரன் சதய நட்சத்திரத்தில் இருக்கிறது. சதயம் ராகுவின் நட்சத்திரம் ஆகும். சுக்கிரன் அடுத்து செவ்வாய் இருக்கிறது. ராகு மற்றும் செவ்வாய் சுக்கிரனுக்கு நட்பு கிரகங்களே ஆனாலும் இந்த அமைவு ஆணுக்கு சுக்கில உற்பத்தி, பெண்ணுக்கு சுரோணித உற்பத்தி, கர்ப்பப்பை கோளாறு கண்டுபிடிக்க சற்று கடினமான அளவில் இருக்கும். லக்கினப்படி ஆராய்ந்தால் இன்னும் கூடுதலான தகவல் கிடைக்கும்.

வாழ்க வளமுடன்

அடுத்த பதிவில் மேற்குறிப்பிட்ட கால இடைவெளியில் பிறந்த அந்தப்பெண்ணின் ஜாதகத்தை ஆராயலாம்.

Saturday 11 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-1)



மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-1)





அன்பார்ந்த வாசகப் பெருமக்களே இந்த பதிவில் 08-10-1978 அன்று காலை 6.00 க்கு மேல் 09-10-1978 / பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது 09-10-1978 அன்று இரவு 11.30 க்கு 110 30’ (வடக்கு) ; 770 52’ (கிழக்கு) பிறந்த ஒரு ஆணின ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



இந்த ஜாதகர் ஒரு ஆண், இவருக்கு லக்கினம் மிதுன ராசியில் 130 31’ 45” –ல் அமைந்துள்ளது.



சுக்கிரன் கேது சம்மந்தம் பற்றி முந்தய பதிவிலேயே பார்த்துவிட்டோம். அடுத்ததாக குரு-வை ஆராய்வோம்.



மேற்படி ஜாதகத்தில் குரு கடகத்தில் 130 8’ 53” ல் இருக்கிறார்.



குருவுக்கு அடுத்தபடியாக சனி இருக்கிறார். குரு சனி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நட்பு. மேலும் ஒரு ஜாதகத்தில் குரு சனியை சேர்ந்தாலும் சனி குருவை சேர்ந்தாலும் யோகமே. குழந்தை பாக்கியம் உண்டு. அதே சமயத்தில் சனியானவர் மந்தன் என்பதால் தாமதமாகத்தான் கிடைக்கும்.



அடுத்து மூன்றாம் பாவக ஆரம்ப முனை(கடகத்தில் 100 55’ 10”) நின்ற நட்சத்திரம் பூசம். பூசத்தின் அதிபதி சனி. இந்த சனிபகவானை ஆராயவேண்டும்.



சனிக்கு 5-ல் சந்திரன் இருக்கிறார். 9-ல் யாரும் இல்லை. எனவே சனி, சந்திரனை திரிகோண அமைவு கிரகங்களாக எடுத்துக்கொள்ளலாம். எனவே சனி சந்திரன் அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை விகலை அடிப்படையில் வரிசை படுத்தி பார்க்கும் பொழுது



சனி (சிம்மத்தில்) 130 49’ 18” லும்

சந்திரன் (விருச்சிகத்தில்) 260 55’ 34” லும் இருக்கின்றனர்.



மூன்றாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி (சனி) விந்தணு உற்பத்திக்குக் காரணமாகிறார். என்பது தெரிந்ததே. இந்த சனிக்கு அடுத்து சந்திரன் இருப்பது - சனி சந்திரன் ஒருவருக்கு ஒருவர் பகை- இவருக்கு உற்பத்தியாகும் விந்தணு தொகுப்பு நீர்த்திருக்கும் அல்லது எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதை காட்டுகிறது.



அடுத்து ஐந்தாம் பாவக ஆரம்பமுனை (துலாத்தில் 140 56’ 32”) நின்ற நட்சத்திரம் சுவாதி. இதன் அதிபதி ராகு. இந்த ராகுவை ஆராய வேண்டும். பொதுவாக எந்த ஒரு பாவகத்தின் ஆரம்பமுனையும் ராகுவின் நட்சத்திரங்களில் (திருவாதிரை, சுவாதி, சதயம்) அமைவது அந்தந்த பாவகத்தை நசிக்கும். (திரிகோண அமைவு பெற்ற கிரகங்களை சம்மந்தப்பட்ட திரிகோண ராசிகளில் எந்தெந்த ராசிகளில் கிரகம் இருக்கிறதோ அந்தந்த ராசிகளில் பாகை கலை வரிசைப்படி அமைத்துக்கொள்ளலாம், கிரகங்கள் இல்லாத ராசியில் அமைக்கக் கூடாது. உதாரணமாக சனி சந்திரன் திரிகோண அமைவு பெற்ற கிரகங்கள் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். இந்த சனி சந்திரனை தனுசு மற்றும் சிம்மத்தில் அமைக்கலாம், மேஷத்தில் அமைக்கக்கூடாது.)



சனி சந்திரனை சிம்மத்தில் வைத்துப் பார்க்கும்போது சந்திரன் 260 55’ 34” ல் இருப்பதாலும் சந்திரனை அடுத்து (கண்ணியில்) ராகு 10 03’ ௦1” ல் இருப்பதாலும் ரகுவும் சந்திரனும் ஒன்றையொன்று எதிர் நோக்குகின்றனர். ராகுவும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் பகை என்பதால் புதிர உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.



அடுத்து 2 மிட ஆரம்ப முனை (கடகத்தில் 110 6’ 15”) நின்ற நட்சத்திர அதிபதி சனி பகவான். சனிபகவானின் நிலைய முன்பே பார்த்துவிட்டோம் (ஏன் இரண்டாமிடத்தை ஆய்வு செய்ய வேண்டும்? குடும்பத்தில் புதிதாக சேரப்போகும் நபரை குறிப்பிடுவது இரண்டாமிடம், எனவே இரண்டாமிடத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்



இதுவரை மேற்குறிப்பிட்டுள்ள ஜாதகத்தை ஆய்வு செய்ததில்



அ) குரு 70% சாதகமாக இருக்கிறது. (சனி மந்தப் படுத்துவதால் - 30%) (தோராயமான மதிப்பீடுதான்)



ஆ) சுக்கிரன் சாதகமாக இல்லை



இ) மூன்றாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி சனி சாதகமாக இல்லை



ஈ) ஐந்தாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி ராகுவும் சாதகமாக இல்லை.



உ) இரண்டாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி சனி சாதகமாக இல்லை



எனவே இவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு தோராயமாக 15% முதல் 20%. மட்டுமே முறையான சிகிச்சை, வாய்ப்பை அதிகப்படுத்தும். வாய்ப்பை அதிகப்படுத்துவது காலத்தின் கையில்



வாழ்க வளமுடன்



அடுத்த பதிவில் இவருடைய மணைவி ஜாதகத்தை ஆய்வு செய்யலாம்....

Thursday 9 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.




அன்பார்ந்த வாசகப் பெருமக்களே, வணக்கம்.



நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பதிவு....



மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.



பொதுவாக இன்றைய காலகட்டத்தில், ஜோதிடம் பொய் என்பதற்கு, ஜோதிடம் அறிவியல் பூர்வமானதல்ல, வானத்தில் உள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் மனிதர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற கருத்தை முன் வைக்கப் படுகிறது.



ஜோதிடம் வெறும் அறிவியல் பூர்வமானது என்பதைவிட “ஜோதிடம் அறிவியல் பூர்வமானதும் விஞ்ஞானப் பூர்வமானதும் ஆகும்” என்பதே சரி. அறிவியல் வேறா? விஞ்ஞானம் வேறா? என்று கேட்டால்.... ஆம் இரண்டும் வேறு வேறுதான்.



எப்படி? அறிவியல் என்பது அறிவு தொடர்புடையது. விஞ்ஞானம் என்பது வின்+ஞானம் விண்ணில் உள்ள நட்சத்திரம் மற்றும் கிரகங்கள் பற்றிய ஞானம் ஆகும்.



ஜோதிடம் விஞ்ஞானப் பூர்வமானதும் அறிவியல் பூர்வமானதும் என்பது பற்றியும், கிரகங்களும் நட்சத்திரங்களும் மனிதர்களை கட்டுபடுத்துகிறது என்பது பற்றியும் என் அறிவுக்கு எட்டியவரை ஒரு ஆய்வு



குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு மருத்துவ ரீதியாக மூன்று காரணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன



(அ) ஆண் மலடு அல்லது குறைபாடு,



(ஆ) பெண் மலடு அல்லது குறைபாடு,



(இ) ஆண் பெண் இருவரும் மலடு அல்லது குறைபாடு.



இந்த மூன்றுவிதமான பிரச்சனைகளுக்கும் மருத்துவ அறிவியலில் தீர்வு உண்டு.



ஆனாலும் மருத்துவ அறிவியலால் தீர்க்க முடியாத நான்காவதாக ஒரு பிரச்சனை இருக்கின்றது. அதாவது இருவருக்குமே எந்தவிதமான குறையும் இல்லை. அனைத்துவிதமான பரிசோதனைகளிலும் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனாலும் குழந்தை இல்லை.



இவ்வகை தம்பதியருக்கு, குழந்தை கண்டிப்பாகப் பிறக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் மருத்துவரிடம் செல்கிறார்கள். மீண்டும் பரிசோதனை. பரிசோதனை முடிவு அனைத்தும் சரியாக இருக்கிறது. எந்தக் குறையும் இல்லை. மருத்துவரின் கருத்து “எங்களுக்குத் தெரிந்தவரை, எங்களால் முடிந்தவரை அனைத்தும் செய்தாகிவிட்டது. இதற்குமேல் தெய்வத்தின் கையில்தான் உள்ளது. நம்பிக்கையை கைவிடாதீர்கள்.”



நம்பிக்கையுடன் மேலும் சில ஆண்டுகள். ஆனாலும் குழந்தை இல்லை. இங்கு மருத்துவரின் திறமை, அறிவு, மருத்துவ அறிவியல் ஆகிய எவற்றையும் குறை கூறவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. (மருத்துவ) அறிவியலாலும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளும், சங்கதிகளும் இருக்கிறது. என்பதை சுட்டிக் காட்டுவதே இக் இக்கட்டுரையின் நோக்கம்.



இனி ஜோதிட ரீதியாக மேற்படி குழந்தை இல்லாமை பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது பற்றி காண்போம்.



ஜோதிடரீதியாக குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் (கிரக அடைவு) நிறைய உண்டு. அவை அனைத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அது சாத்தியம் இல்லை. காரணம், மருத்துவரீதியாக குழந்தை இல்லாமைக்கு எவ்வளவோ கரணங்கள் இருந்தாலும், கண்டுபிடிக்க முடியாத காரணங்களும் உண்டல்லவா? கண்டுபிடிக்கப்பட்ட காரனங்களிலேயே ஒருவருக்கு தெரிந்த காரணம் மற்றவருக்கு தெரியாமலிருக்கிறது என்பதும் உண்மைதானே? அதுபோல சோதிடத்திலும் நமது அறிவுக்கு அப்பாற்பட்ட பல சங்கதிகள் இருக்கின்றன என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.



இந்தக் கட்டுரையில் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சில விளக்கங்ககளை தந்திருக்கிறேன்.



ஒரு ஜாதகத்தில் ஆணின் சுக்கிலத்திற்கும்(விந்தணு), பெண்ணின் சுரோனிதத்திற்கும்(கரு முட்டை) மூல கர்த்தாவாக சுக்கிரனும், கரு உற்பத்திக்கு கர்த்தாவாக குருவும், ஐந்தாம் பாவக ஆரம்பமுனை நின்ற நட்சத்திர அதிபதியும், குழந்தை பேறு-க்கு காரணமாக இருக்கும். இவை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானவை.



ஆணாக இருந்தால் விந்தணு உற்பத்தி, உற்பத்தி செய்யப்பட்ட விந்தணுக்களின் செயல்திறன் ஆகியவற்றிற்கு மூன்றாம் பாவக ஆரம்பமுனை நின்ற நட்சத்திர அதிபதி காரணமாக இருக்கும்.



கீழே உள்ள இரண்டு ராசி கட்டங்களையும் பார்க்கவும். இரண்டிலுமே லக்கினம் குறிக்கப்படவில்லை, என்பதை கவனிக்கவும். ஒரு சில விஷயங்களை லக்கினம் இல்லாமலேயே நிர்ணயிக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டவே லக்கினத்தை குறிப்பிடவில்லை. மேலும் இரண்டு கட்டங்களும் வாக்கிய கணிதப்படி கணிக்கப்பட்டவை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.



ஆணின சுக்கிலத்திற்கும், பெண்ணின் சுரோனிதத்திற்கும் மூல கர்த்தாவாக சுக்கிரன் காரணமாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்

கீழே உள்ள 08-10-1978 / காலை 6.00 க்கு ஒரு கட்டமும் 9-10-1978 பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்கு ஒரு கட்டமும் உள்ளது.





இரண்டு கட்டங்களிலும் சுக்கிரன், கேது, குரு ஆகிய மூன்று கிரகங்களும் வெளிர் நீல நிற கட்டத்தில் இருப்பதை கவனிக்கவும். இப்படியான அமைப்பை, மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோனத்தில் இருப்பதாக ஜோதிடத்தில் குறிப்பிடுவது வழக்கம். அதாவது சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் கேதுவும், கேது நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் குருவும் குரு நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் சுக்கிரனும் இருப்பது திரிகோண அமைவு எனப்படும். இப்படி உள்ள கிரகங்களை, கிரகங்கள் அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை விகலை அடிப்படையில் வரிசை படுத்தி பார்க்கும் பொழுது



கேது 8-10-1978 அன்று (மீனத்தில்) 10 8’ 31” லும், 9-10-1978 அன்று 10 2’ 29” லும்

சுக்கிரன் 8-10-1978 அன்று (விருச்சிகத்தில்) 00 37’ 6” லும், 9-10-1978 அன்று 10 32’ 42” லும்

குரு 8-10-1978 அன்று (கடகத்தில்) 120 56’ 10” லும், 9-10-1978 அன்று 130 10’ 06” லும்



என்ற வரிசையில் அமையும். இந்த வரிசைப்படி கேது சுக்கிரன் ஆகிய இருகிரகங்களுக்கும் இடையே 1 பாகைக்கும் குறைவான வித்தியாசம் இருக்கிறது. இப்படி சுக்கிரனும் கேதுவும் மிக நெருக்கமான நிலையில் இருந்தால், இப்படி ஒரு அமைவு ஆண்களின் ஜாதகத்தில் அமைந்தால் (அதாவது 08-10-1978 / காலை 6.00 க்கு மேல் 9-10-1978 பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்குள் பிறந்துள்ள) பெரும்பாலானவர்களுக்கு விந்தணு (சுக்கிலம்) உற்பத்தியில் பிரச்சினை இருக்கும். அதாவது விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும் அல்லது விந்தனுக்களின் வாழும் தன்மை (விந்தணு ஆணிடமிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கருக்குழாய் வழியாக சென்று கர்ப்பப்பையை அடைந்து கரு உருவாகும் வரை உள்ள கால இடைவெளி) குறைவாக இருக்கும். இதே அமைவு பெண்களின் ஜாதகத்தில் இருந்தால் பெரும்பாலானவர்களுக்கு கரு முட்டை (சுரோணிதம்) உற்பத்தி ஆவதில் பிரச்சனை இருக்கும். அதாவது விந்தணுவை தன்னுள் வாங்கி கருவாக்க முடியாத அளவிற்கு சக்தி அற்றதாக இருக்கும். அல்லது கர்ப்பப்பை சுருங்கி இருக்கும். இந்த வகை குறைபாட்டை மருத்துவத்தில் கண்டுபிடித்து தீர்வு காணமுடியும். இந்த தீர்வு வெற்றி அடைவதும், அடையாததும் காலத்தின் கையில்.



மேலே குறிப்பட்ட கால கட்டத்திற்குள் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் (60% முதல் 70% வரை) மேலே குறிப்பிட்ட குறைபாடு காணப்படும். லக்கினப்படி ஆராய்ந்தால் மேலும் கூடுதலான தகவல் கிடைக்கும்.



இந்தக் கட்டுரையையும் இதன் தொடர்ச்சிகளையும் படிக்கும் வாசக அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், ஒவ்வொரு பதிவிலும் உள்ள கருத்துக்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை, (மேற்குறிப்ட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்கு இடைபட்ட காலத்தில் பிறந்த தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஜாதகத்தை ஒப்பிட்டு) இங்கு பின்னூட்டம் இடவும். வேறு தேதியில் பிறந்திருந்தாலும் குழந்தை இல்லாத தம்பதியினர்களில் (60% முதல் 70% வரை) பெரும்பாலானவர்களுக்கு சுக்கிரன், குரு இரண்டு கிரகங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ ராகு அல்லது கேது அல்லது பகை கிரகங்களினால் பாதிக்கப் பட்டிருப்பார்கள். இதையும் கவனத்தில் கொள்ளவும். இதுவரை பல்வேறு தலைப்புகளில் “சர்வே” நடத்தப்பட்டிருக்கிறது. அதுபோல இதுவும் ஒரு “சர்வே” இந்த சர்வே-க்கு உங்களின் ஆதரவை அளித்து ஜோதிடத்தின் பரிமாணத்தை உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.



வாழ்க வளமுடன்



மேற்படி விஷயங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இதற்கான மேலும் கூடுதல் தகவல் மற்றும் விளக்கங்களுடன் அடுத்த பதிவில்.....

Friday 16 August 2013

ஜோதிடம் என்றால்??????

பதிவு 14

உடலில் ஏற்படும் கோளாறுகள், கல்வி, அறிவு, திறமை, நிர்வாகத்திறமை, தொழில், குழந்தைப்பேறு, இதுபோன்ற உடலியல், அறிவு(புத்தி), திறமை, மனம் சார்ந்த விதங்களில் கிரகங்கள் மனிதர்களை இயக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது அல்லது நிர்ணயிக்கிறது.

மேற்படி கருத்து முற்றிலும் தவறானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேற்படி விஷயங்கள் அனைத்தும் சூழ்நிலை, சந்தர்ப்பங்கள், பயிற்சி, பாரம்பரியம் அல்லது மரபுவழி(gene), போன்ற காரணிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. கிரகங்களுக்கும் மேற்படி விஷயங்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் நிச்சயம் கிடையாது.

இந்த கருத்துக்கு விளக்கம் அடுத்தப்பதிவில்..... என்று முடித்திருந்தேன்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒருவருடைய உடல்நிலையில் ஏற்படும் கோளாறுகளுக்கு சந்தர்ப்பம், (மாசுபட்ட)சூழ்நிலை அவர்களிடம் உள்ள பழக்கவழக்கங்கள் மற்றும் மரபு வழி போன்ற காரணிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன, கிரகங்கள் காரணம் அல்ல என்பது கருத்து.

மேற்படி கருத்தின்படி ஒருவருக்கு புற்று நோய் இருப்பதற்கான காரணம் 1) தீயப் பழக்கம், 2) (மாசுபட்ட) சூழ்நிலை, 3) மரபுவழி, ஆகிய மூன்று காரணங்கள் மட்டுமே இருக்கமுடியும்.

5-6 ஆண்டுகளாக தொடர் புகைப்பழக்கம் (chain smoking) உள்ள ஒருவருக்கு (வேறு கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லை) புற்று நோய் வந்துவிட்டது. அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் அவருடைய புகைப் பழக்கமே புற்று நோய்க்குக் காரணம் என்றார்.

ஆனால் தொடர் புகைப்பழக்கத்துடன் பான்பராக், ஜரிதா, ஹான்ஸ் போன்ற கூடுதலான பழக்கங்களையும் (சுமார் 40 ஆண்டுகளாக) கொண்டுள்ள ஒருவர் மிக நன்றாக வளம் வருகிறார்.

இதற்கென்ன காரணம் என்றால் முன்னவருக்கு மாசுபட்ட சூழ்நிலையும் செர்ந்துகொண்டதால் புற்று நோய் வந்திருக்கலாம் என்று கூறப்படும். பின்னவரும் அதே சூழ்நிலையில்தான் இருக்கிறார், ஆனால் அவருக்கு ஏன் புற்று நோய் வரவில்லை என்று கேட்டால்...

முன்னவருடைய தாய்வழியிலோ தந்தை வழியிலோ பாட்டன் பாட்டி, முப்பாட்டன் முப்பாட்டி யாருக்காவது புற்றுநோய் இருந்து இவருக்கு மரபு வழியாக வந்திருக்கலாம் என்பர்.

விசாரித்ததில் முன்னவருடைய தாய் தந்தை வழியில் மூன்று முந்தைய தலைமுறையில் யாருக்கும் புற்று நோய் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டாமவரின் தந்தை வழி தாத்தாவிற்கு புற்று நோய் இருந்ததாக தெரிகிறது.

இப்பொழுது சொல்லுங்கள் முன்னவருக்கு புற்று நோய் வந்ததற்கும் பின்னவருக்கு புற்றுநோய் வராததற்கும் என்ன காரணமாக இருக்கும்?

குறிப்பு: இங்கு புகைப்பிடித்தல் பான்பராக், ஜரிதா, ஹான்ஸ் போன்ற புகையிலை பழக்கத்தை நியாயப்படுத்தவில்லை. மேலே கூறப்பட்ட உதாரணம் கற்பனையானதல்ல, உண்மைச் சம்பவம். இதுபோன்ற வேறு வகையில் உண்மைச் சம்பவங்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

அடுத்தப் பதிவில் குழந்தைப்பேறு - சூழ்நிலை, சந்தர்ப்பங்கள், பயிற்சி, பாரம்பரியம் அல்லது மரபுவழி(gene), போன்ற காரணிகள் நிர்ணயிப்பதில்லை-விளக்கம்.

Thursday 15 August 2013

ஜோதிடம் என்றால்???????

பதிவு 13


ஜோதிடவியலின்படி கிரகங்கள் மனிதர்களை எந்தெந்த விதத்தில் கட்டுப்படுத்துகிறது?

ஜோதிடவியலின்படி கிரகங்கள் பலவிதத்தில் கட்டுப்படித்துகின்றன.

உதாரணமாக உடலில் ஏற்படும் கோளாறுகள், கல்வி, அறிவு, திறமை, நிர்வாகத்திறமை, தொழில், குழந்தைப்பேறு, இதுபோன்ற உடலியல், அறிவு(புத்தி), திறமை, மனம் சார்ந்த விதங்களில் கிரகங்கள் மனிதர்களை இயக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது அல்லது நிர்ணயிக்கிறது.

மேற்படி கருத்து முற்றிலும் தவறானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேற்படி விஷயங்கள் அனைத்தும் சூழ்நிலை, சந்தர்ப்பங்கள், பயிற்சி, பாரம்பரியம் அல்லது மரபுவழி(gene), போன்ற காரணிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. கிரகங்களுக்கும் மேற்படி விஷயங்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் நிச்சயம் கிடையாது.

இந்த கருத்துக்கு விளக்கம் அடுத்தப்பதிவில்.....

Wednesday 14 August 2013

ஜோதிடம் என்றால்???????

பதிவு 12

சென்ற பதிவில்....

வானமண்டலத்தில் எங்கோ வெகு தொலைவில் இருக்கும் கிரகங்கள் இங்கு பூமியில் மனிதர்களை எப்படி கட்டுப்படுத்தும்?

இதற்க்கு விளக்கம் அடுத்த பதிவில்.... என்று முடித்திருந்தேன்.

விளக்கம்.

நம்மில் வானவில்லை பார்க்காதவர் இருக்கமுடியாது..

அந்த வானவில்லில் உள்ள நிறங்கள் எப்படி தோன்றுகின்றன?

சூரியனின் ஒளிக்கதிரை கிரகங்கள் வாங்கி பிரதிபலிப்பதனால் ஏற்படுகிறது என்பது வானவியல் படித்த அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

இது அந்தக்காலத்து (1978-79) SSLC பாடத்திலே நாங்கள் படித்த விஷயம்.

இந்த வானவில்லில் உள்ள நிறங்கள், கிரகங்களின் கதிர்வீச்சினால் ஏற்ப்படுபவைதான். இந்தக் கதிர்வீச்சு, பூமியில் உள்ள உயிரினங்களை கட்டுப்படுத்துகின்றன.

மீண்டும் அடுத்த பதிவில்

Tuesday 13 August 2013

ஜோதிடம் என்றால்??????

பதிவு 11

சென்ற பதிவில்

சரி மற்றொரு கேள்வி...

வான மண்டலத்தில் இல்லாத ராகு கேதுக்களை ஜோதிடத்தில் சேர்த்த முன்னோர்கள் ஏன் யுரேனஸ், நெப்டியூன், ஆகியவற்றை சேர்க்கவில்லை??

இந்தக் கேள்விக்கு விளக்கம் அடுத்த....

என்று முடித்திருந்தேன்...

இதற்க்கு விளக்கம்..

ராகு கேது இரண்டும் நிழல் கிரகங்கள் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, கிரகங்கள் என்று கூறப்படவில்லை. இதுபற்றி பதிவு 8ல் கூறப்பட்டுள்ளது . எனவே வானமண்டலத்தில் இல்லாத கிரகம் என்று ராகு கேதுக்களை குறிப்பிட முடியாது.

இப்பொழுது யுரேனஸ், நெப்டியூன், (புளூட்டோ) ஆகியவை ஏன் ஜோதிடத்தில் பயன்படுத்தவில்லை, என்ற கேள்விக்கு...

சில ஆண்டுகளுக்கு முன்புவரை புளூட்டோ வை ஒரு கிரகமாக அங்கீகரித்திருந்தது அறிவியல். அனால் அதே அறிவியல் சமீபத்தில் புளூட்டோ கிரக தகுதியை இழந்து விட்டதாக கூறி, புளூட்டோவிற்கு கிரக அந்தஸ்தை ரத்து செய்தது.

ஆனால் நிழல் கிரகங்களை அன்றுமுதல் இன்றுவரை, கிரகமாக ஜோதிடத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டையும் ஜோதிடத்தில் செர்க்கப்படாததன் காரணம் இவ்விரண்டு கிரகத்தில் இருந்து பிரதிபலிக்கப்படும் ஒளிக்கதிர் பூமியை வந்தடைவதில்லை.. மேலும் இவ்விரண்டு கிரகத்தில் இருந்து பிரதிபலிக்கப்படும் ஒளிக்கதிர்கள் பூமியில் உள்ள உயிரினங்களை இயக்குவதற்குறிய தகுதி இல்லை எனவே இவற்றை இந்திய பாரம்பரிய ஜோதிடத்தில் சேர்க்கப்படவில்லை.

ஆனாலும் மேலை நாட்டவர்கள் யுரேனஸ், நெப்டியூன், கிரக அந்தஸ்த்தை இழந்த புளூட்டோ ஆகிய மூன்று கிரகங்களையும் ஜோதிடத்தில் சேர்த்து ஆய்வு செய்து பலன்களை நிர்ணயித்துள்ளனர். மேலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது நமதுநாட்டிலும் இந்த ஆய்வு தொடர்கிறது..

இங்கு மற்றொரு கேள்வி.....

வானமண்டலத்தில் எங்கோ வெகு தொலைவில் இருக்கும் கிரகங்கள் இங்கு பூமியில் மனிதர்களை எப்படி கட்டுப்படுத்தும்?

இதற்க்கு விளக்கம் அடுத்த பதிவில்....

Saturday 10 August 2013

ஜோதிடம் என்றால்???????????

பதிவு 10

சென்ற பதிவில்

நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் அதாவது ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள நசத்திரங்களில் இருந்து அதன் ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைய சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இப்படியிருக்க இன்று பூமியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் 400 ஆண்டுகளுக்குப் பிறகுதானே வந்து சேரும். ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தக் குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் பலன்கள் நடக்கும் என்று கூறப்பட்டிருப்பது எப்படி பொருந்தும்? இது விஞ்ஞானக் கருத்துக்கு முரணாக உள்ளதே?

இதற்கு விளக்கம் அடுத்த பதிவில்... என்று முடித்திருந்தேன்.

விளக்கம்..

வானமண்டலத்தை 27 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் அந்தந்தபகுதியில் பிரகாசமாக இருக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் பெயரை சூட்டியுள்ளார்கள் என்று முந்தயபதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அந்த 27 பகுதிகளையும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வரு மண்டலத்திலிருந்தும் ஒரு நட்சத்திரம் வீதம் மொத்தம் மூன்று நட்சத்திரங்களை (பகுதிகளை) நவகிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கி இருக்கிறார்கள்.

அதாவது முதலில் 0 பாகையிலிருந்து 120 பாகைவரை ஒரு மண்டலம்(zone), 120 பாகையிலிருந்து 240 பாகைவரை ஒரு மண்டலம், 240 பாகையிலிருந்து 360 பாகைவரை ஒரு மண்டலம் என்று மூன்று மண்டலங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

முதல் மண்டலத்தில் உள்ள அசுவனி, இரண்டாம் மண்டலத்தில் உள்ள மகம், மூன்றாம் மண்டலத்தில் உள்ள மூலம் இம்மூன்று பகுதிகளிலும் கேதுவின் ஆதிக்கம் இருக்கும். மேலும் அசுவனி மேஷத்தில் இருப்பதால் செவ்வாய் மற்றும் கேதுவின் ஆதிக்கமும், மகம் சிம்மத்தில் இருப்பதால் சூரியன் மற்றும் கேதுவின் ஆதிக்கமும், மூலம் குரு மற்றும் கேதுவின் ஆதிக்கமும் இருக்கும்.

இந்த அடிப்படையில் அந்தந்தப்குதியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தைப் பொறுத்து பலன் நிர்ணயிக்கப் படுகிறது. சந்திரன் அன்றையதினம் எந்தப் பகுதியில் இருக்கிறதோ அந்தப் பகுதியின் நட்சத்திரமே அன்று பிறக்கும் குழந்தையின் நட்சத்திரம் ஆகும்

எனவே சந்திரன் குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்பொழுது அந்த ராசியின் அதிபதி, நட்சத்திரத்தின் அதிபதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே பலன்கள் இருக்கும்.

எனவே நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் உயிரினங்களை பாதிப்பதில்லை. சந்திரன் நின்ற ராசி மற்றும் நடச்த்திரப் பகுதியின் அதிபதி இவர்களின் அடிப்படையிலேயே பலன் நிர்ணயிக்கப்படுகிறது.

உதாரணமாக ஒரு குழந்தை கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்திருந்தால் அந்தக்குழந்தை செவ்வாய் மற்றும் சூரியன் இரண்டின் ஆதிக்கத்தின் கீழ் அதன் பலன் இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தக் குழந்தைக்கு முரட்டு சுபாவத்துடன் வைராக்கியம் அல்லது பிடிவாதம் அதிகம் இருக்கும்.

வேறு ஒரு குழந்தை கார்த்திகை 3 ம் பாதத்தில் பிறந்திருந்தால், சுக்கிரன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

கார்த்திகை 3 ம் பாதத்தில் பிறந்த குழந்தை சுக்கிரனுடைய ஆதிக்கத்தால் அலங்காரப் பிரியராகவும் ஆடம்பரப் பிரியராகவும், சூரியனின் ஆதிக்கத்தால் வைராக்கியம், பிடிவாதம் உள்ளதாகவும் இருக்கும்.

இப்படித்தான் ...

சரி மற்றொரு கேள்வி...

வான மண்டலத்தில் இல்லாத ராகு கேதுக்களை ஜோதிடத்தில் சேர்த்த முன்னோர்கள் ஏன் யுரேனஸ், நெப்டியூன், ஆகியவற்றை சேர்க்கவில்லை??

இந்தக் கேள்விக்கு விளக்கம் அடுத்த....

Friday 9 August 2013

ஜோதிடம் என்றால்????????

பதிவு 9

சென்ற பதிவில்

வானமண்டலத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களை மட்டும் எடுத்துகொள்ளப்ட்டுள்ளது?
மற்றவை ???

இதற்கு விளக்கம்..

உண்மைதான் வானமண்டலத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன.

ஆனால் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பூமியை சுற்றியுள்ள ராசி மண்டலத்தை, 360 பாகைகளை, 27 சம பாகங்களாக, 13 பாகை 20 கலைகள் கொண்ட பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு 13 பாகை 20 கலைகள் கொண்டபகுதியிலும் உள்ள பிரகாசமான நட்சத்திரக் கூட்டத்தின் பெயரை அந்த பகுதிக்கு சூட்டியுள்ளார்கள் நமது முன்னோர்கள்.

ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் இரண்டுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கொண்ண்டதாக இருந்தாலும் இங்கு பூமியில் இருந்து பார்க்கும்போது ஒரே நட்சத்திரமாகத் தெரியும்.

இங்கு மீண்டும் ஒரு கேள்வி...

அதாவது, நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் அதாவது ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள நசத்திரங்களில் இருந்து அதன் ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைய சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இப்படியிருக்க இன்று பூமியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் 400 ஆண்டுகளுக்குப் பிறகுதானே வந்து சேரும். ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தக் குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் பலன்கள் நடக்கும் என்று கூறப்பட்டிருப்பது எப்படி பொருந்தும்? இது விஞ்ஞானக் கருத்துக்கு முரணாக உள்ளதே?

இதற்கு விளக்கம் அடுத்த பதிவில்...

Thursday 8 August 2013

ஜோதிடம் என்றால்???????????

பதிவு 8

சென்ற பதிவில்

கிரகணம் என்பது பற்றி அறிவியல் கூறுது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சூரியனின் ஒளி சந்திரன் மீது விழாமல் பூமி மறைக்கும் போது ஏற்படுவதும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்பொழுது சூரியனை சந்திரன் மறைக்கும்போது ஏற்படுவதும்தான் கிரகணம் ஆகும். ஆனால் ராகு, கேதுக்கள் சூரிய சந்திரர்களை விழுங்குவதால்தான் கிரகணம் ஏற்படுகிறது. இது ஜோதிடக் கருத்து. இது விஞ்ஞானக் கருத்துக்கு எதிராக அல்லவா இருக்கிறது?
இது பற்றி விளக்கம்...

என்று முடித்திருந்தேன்.

விளக்கம்

இதற்கு நான் விளக்கம் தருவதைவிட கீழ்கண்ட இணைப்புகளை பயன்படுத்தி விளக்கம் பெறலாம்.


இந்த இணைப்புகளில் உள்ள விஷயங்களை பொறுமையாகவும், முழுமையாகவும் படிக்கவும்.

1) http://chandroosblog.blogspot.in/2010/06/blog-post.html

2) http://chandroosblog.blogspot.in/2010/07/2.html

3) http://chandroosblog.blogspot.in/2010/08/3.html

4) http://chandroosblog.blogspot.in/2010/10/4.html

அடுத்தப் பதிவில்

வானமண்டலத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களை மட்டும் எடுத்துகொள்ளப்ட்டுள்ளது?
மற்றவை ???

இதற்கு விளக்கம்..

Wednesday 7 August 2013

ஜோதிடம் என்றால்????????

பதிவு 7

சென்ற பதிவில்

சூரியனின் மகன் சனி (கதிரோன் பிள்ளை) என்றும்,
குருவின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்த குழந்தைதான் புதன் என்றும், ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சூரியன் சனிக்குப் பகைவன், சனி சூரியனுக்குப் பகைவன் என்றும்,
குருவின் மனைவிக்கு முறையற்ற வகையில் புதன் பிறந்ததால் குரு புதனிடம் பகைமை கொண்டுள்ளதாகவும், தன் தாயின் கணவர் என்பதால் புதன் குருவிடம் பகைமை பாராட்டாமல் நட்பாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
குரு கிரகம் தேவகுரு, சுக்கிரன் அசுர குரு, எனவே இருவரும் ஒருவருக்கொருவர் பகை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட ராசியை ஆட்சி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் விஞ்ஞானத்தின்படி கிரகங்கள் உயிரற்ற ஜடப்பொருள். அவைகளுக்குள் நட்பு பகை என்ற உறவு எப்படி இருக்க முடியும்? தகப்பன் மகன் உறவு எப்படி இருக்க முடியும்? (குறிப்பிட்ட ராசியை) எப்படி ஆட்சி செய்ய முடியும்? குருவின் மனைவி தாரை என்ற கிரகம் எது? என்ற கேள்விக்கு விளக்கம் காண்போம்

என்று முடித்திருந்தேன்

விளக்கம்

மேற்படி கேள்விகளில், முதலில் \\\ விஞ்ஞானத்தின்படி கிரகங்கள் உயிரற்ற ஜடப்பொருள். அவைகளுக்குள் நட்பு பகை என்ற உறவு எப்படி இருக்க முடியும்? (குறிப்பிட்ட ராசியை) எப்படி ஆட்சி செய்ய முடியும்?/// என்ற கேள்விகளுக்கு மட்டும் விளக்கம் சொல்லிவிட்டு பிறகு மற்ற விஷயத்திற்கு போவோம்.

ஜோதிடத்தில் இரண்டு கிரகங்களுக்கிடையே உள்ள உறவை மூன்றாகக் குறிப்பிட்டுள்ளனர். அவை நட்பு, சமம், பகை.

இரண்டு கிரகங்களுக்கிடையே பகை என்றால் இரண்டு கிரகங்களிலிருந்து வரும் ஒளி கதிர்களும் ஒன்றுக்கொன்று எதிர் தன்மை உடையன என்றும் பொருள். நட்பு என்றால் சாதகமான தன்மை உடையன என்றும், சமம் என்றால் சமத்தன்மை உடையன என்று பொருள்.

ஒவ்வொரு கிரகமும் (குறிப்பிட்ட ராசியை) எப்படி ஆட்சி செய்ய முடியும்? என்றால், ஏதோ சிம்மாசனம் ஏறி ஆட்சி செய்வதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் அது உங்கள் தவறு. உண்மையில் ஒரு கிரகம் குறிப்பிட்ட ராசியில் ஆட்சி என்றால் அந்த ராசியில் அதன் ஒளிக்கதிர் பலம் 100 பங்கு என்றும், உச்சம் என்றால் 125 பங்கு என்றும், மூலத்திரிகோணம் என்றால் 80 பங்கு என்றும், நட்பு என்றால் 60 பங்கு என்றும், சமம் என்றால் 50 பங்கு என்றும், பகை என்றால் 25 பங்கு என்றும், நீச்சம் என்றால் பலம் அனைத்தும் இழந்து 0 ஆக இருக்கிறது என்றும் பொருள்.

மற்ற விஷயங்கள் புராணங்களில் உள்ள கதைகள். அந்த கதைகளுக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. உதாரனமாக குருவின் மனைவி தாரை எந்த கிரகம்? இந்தக் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இந்த புராணக்கதைகளின் பின் ஏதோ உள்கருத்து இருக்க வேண்டும். மேற்படி புராணக்கதைகள் பற்றிய தெளிவு கிடைக்கும் வரை, ஆதரிக்கவும் மாட்டேன், எதிர்க்கவும் மாட்டேன்.

எனக்குத் தெரியாது அலது என்னிடம் ஆதாரம் இல்லை என்ற காரணத்தை வைத்துக்கொண்டு இதெல்லாம் பொய், கட்டுக்கதை, முட்டாள்தனம் என்றெல்லாம் வாதிடுவதை நான் முட்டாள்தனமாக கருதுகிறேன்.

அடுத்த பதிவில்

கிரகணம் என்பது பற்றி அறிவியல் கூறுது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சூரியனின் ஒளி சந்திரன் மீது விழாமல் பூமி மறைக்கும் போது ஏற்படுவதும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்பொழுது சூரியனை சந்திரன் மறைக்கும்போது ஏற்படுவதும்தான் கிரகணம் ஆகும். ஆனால் ராகு, கேதுக்கள் சூரிய சந்திரர்களை விழுங்குவதால்தான் கிரகணம் ஏற்படுகிறது. இது ஜோதிடக் கருத்து. இது விஞ்ஞானக் கருத்துக்கு எதிராக அல்லவா இருக்கிறது?
இது பற்றி விளக்கம்...

Tuesday 6 August 2013

ஜோதிடம் என்றால்?????????

பதிவு 6

சென்ற பதிவில்

(OK இதுவரை கூறப்பட்டவைகளை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என்றே வைத்துக்கொள்வோம்) ஆனால் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வானவியலின்படி, தங்களது சுற்றுப் பாதையில் எக்காலத்திலும் பின்னோக்கிச் செல்வதில்லை. ஆனால் ஜோதிடத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வக்கிர கதியில் பின்னோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இதையும் விஞ்ஞானம் என்று கூறுகிறீர்களா? விளக்கம் அடுத்தப் பதிவில், என்று முடித்திருந்தேன்

விளக்கம்

நிச்சயமாக. இதிலென்ன சந்தேகம்.? மேற்படி கிரகங்களின் வக்கிரத்தை விஞ்ஞானம் என்றுதான் கூறுவேன். இந்த வக்கிரகதியை ஒரு எளிய உதாரணத்துடன் விளக்கினால் புரியும்.

நாம் பேருந்தில் செல்லும் போது நம் பேருந்து வேறொரு பேருந்தை முந்தி செல்லும்போது அந்தப் பேருந்து பின்னோக்கி செல்வது போலத் தோன்றும்.
உண்மையில் இரண்டுமே முன்னோக்கிதான் செல்கின்றன. இந்த மாயத்தோற்றத்திற்குக் காரணம் இரண்டு பேருந்துகளின் வேக மாறுபாடுதான். இதுவும் ஆறாம் வகுப்புப் பாடமே. (இந்த ஆறாம் வகுப்பு பாடத்தை நீங்கள் படிக்கவில்லையோ?)

இதே போலத்தான் பூமி முதற்கொண்டு அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வரும்போது, வேகமாறுபாட்டால் ஏற்படும் மாயத் தோற்றமே வக்கிரம்.

இப்பொழுது சொல்லுங்கள் ஜோதிடம் விஞ்ஞானம்தானே?

அவசரம் வேண்டாம் நண்பரே, இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.

சரி & sory,கேளுங்கள் முடிந்தவரை, தெரிந்தவரை விளக்கம் தருகிறேன்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஏன் வக்கிரம் இல்லை?

சூரியன் நிலையானது, சூரியனை பூமி சுற்றும் வேகமும், சந்திரன் பூமியுடன் சேர்ந்து சுற்றும் வேகமும் ஒன்றே. எனவே சூரிய சந்திரர்களுக்கு வக்கிரம் இல்லை.

அடுத்த பதிவில்

சூரியனின் மகன் சனி (கதிரோன் பிள்ளை) என்றும்,
குருவின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்த குழந்தைதான் புதன் என்றும், ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சூரியன் சனிக்குப் பகைவன், சனி சூரியனுக்குப் பகைவன் என்றும்,
குருவின் மனைவிக்கு முறையற்ற வகையில் புதன் பிறந்ததால் குரு புதனிடம் பகைமை கொண்டுள்ளதாகவும், தன் தாயின் கணவர் என்பதால் புதன் குருவிடம் பகைமை பாராட்டாமல் நட்பாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
குரு கிரகம் தேவகுரு, சுக்கிரன் அசுர குரு, எனவே இருவரும் ஒருவருக்கொருவர் பகை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட ராசியை ஆட்சி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் விஞ்ஞானத்தின்படி கிரகங்கள் உயிரற்ற ஜடப்பொருள். அவைகளுக்குள் நட்பு பகை என்ற உறவு எப்படி இருக்க முடியும்? தகப்பன் மகன் உறவு எப்படி இருக்க முடியும்? (குறிப்பிட்ட ராசியை) எப்படி ஆட்சி செய்ய முடியும்? குருவின் மனைவி தாரை என்ற கிரகம் எது? என்ற கேள்விக்கு விளக்கம் காண்போம்

Monday 5 August 2013

ஜோதிடம் என்றால்????????????

பதிவு 5

சென்ற பதிவில்

சூரியன் நிலையானது, பூமி முதற்கொண்டு புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி போன்ற அனைத்து கோள்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன, என்று விஞ்ஞானம் கூறுகின்றது. இது ஆறாம் வகுப்புப் பாடம். ஆனால் ஜோதிடத்தில் சூரியன் முதற்கொண்டு அனைத்து கோள்களும் பூமியை சுற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்) ஆனால் ஜோதிடமோ கோள் என்கிறது. சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆனால் இதையும் கோள் என்றே ஜோதிடம் கூறுகிறது. இப்படி ஜோதிடத்தின் அடிப்படையே விஞ்ஞானத்திற்கு எதிராக இருக்கிறது. விஷயம் இப்படி இருக்க ஜோதிடத்தை விஞ்ஞானம் என்றே ஏற்றுக்கொள்ள முடியாது. நீரோ நுண்விஞ்ஞானம் என்கிறீர். வேடிக்கையாக இருக்கிறது. எப்படி ஏற்றுக்க்ள்ள முடியும்? - இதற்கு விளக்கம் காண்போம் - என்று முடித்திருந்தேன்

விளக்கம்

விஞ்ஞானக் கருத்து என்று கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் அதாவது பூமி முதற்கொண்டு அனைத்து கோள்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன என்பதும், சூரியன் ஒரு விண்மீன் என்பதும், சந்திரன் ஒரு துணைக்கோள் என்பதும் முற்றிலும் மறுக்கமுடியாத உண்மையே.

ஆனால், ஜோதிடத்தில் கூறப்பட்டிருப்பது விஞ்ஞானத்திற்கு முரணாக இருக்கிறது, என்று கூறுவதுதான் தவறு. ஜோதிடத்தில் விஞ்ஞானத்தின்படிதான் கூறப்பட்டிருக்கிறது.

என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை எப்போதும் வியப்பாகத்தானே இருக்கும்.

நாம் வசிப்பது பூமியில் எனவே ஜோதிடம் பூமியை மையப்படுத்தி எழுதப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும்போது, பூமியிலிருந்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் என்ன கோணத்தில் இருக்கிறது என்று அளவிட்டு கணித்து, எழுதப்பட்டதுதான் ஜோதிடம். இந்த வகையில் பார்க்கும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் பூமியைச் சுற்றுவது போல தோன்றும்.

ஜோதிடம் விஞ்ஞானத்திற்கு முரணாக ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையான விஞ்ஞானம், விஞ்ஞானத்திற்கு எதிராகவோ, முரனாகவோ இருக்காது.

மேலும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது சூரியன் ஒரு விண்மீன், சந்திரன் பூமியின் துணைக்கோள். ஆனால் ஜோதிடத்தில் இவ்விரண்டையும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டிருக்கின்றணவே, இது எப்படி விஞ்ஞானம் ஆகும்?

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய கோள்களும் ராகு, கேது என்ற நிழல் கோள்களும், பூமியில் மனிதர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேற்படி கோள்களுடன் சூரியனும், சந்திரனும் சேர்ந்து பூமியில் மனிதர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே அனைத்திற்கும் சேர்த்து பொதுவாக கோள்கள் என்று பெயரிட்டுள்ளனர். பொதுப் பெயர். இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து ஜோதிடம் விஞ்ஞானமற்றது, என்று கூறுவது நியாயமற்றது.

(OK இதுவரை கூறப்பட்டவைகளை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என்றே வைத்துக்கொள்வோம்) ஆனால் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வானவியலின்படி, தங்களது சுற்றுப் பாதையில் எக்காலத்திலும் பின்னோக்கிச் செல்வதில்லை. ஆனால் ஜோதிடத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வக்கிர கதியில் பின்னோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இதையும் விஞ்ஞானம் என்று கூறுகிறீர்களா? விளக்கம் அடுத்தப் பதிவில்

Sunday 4 August 2013

அனாட்டமிக் தெரபி

இங்கே கீழே ஒரு காணொளி பதிவிடப்பட்டுள்ளது.

இந்தக் காணொளியில் உரையாற்றியிருப்பவர் திரு ஹீலர் பாஸ்கர் என்பவர்.

இவருடைய கருத்துக்களில் உடன்பாடு உண்டா????

பாகம் 1






பாகம் 2






பாகம் 3




பாகம் 4 A



இப்படி இன்னும் சில காணொளிகள் YOUTUBE ல் இருக்கின்றன. அவற்றையும் 
காணுங்கள். பயனற்ற அல்லது பிடிக்காத விஷயங்களை விடுத்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஜோதிடம் என்றால்???????????

பதிவு 4

சென்ற பதிவில்

பண்டைய கிரேக்கர்களாலும், பபிலோனியர்களாலும், எகிப்தியர்களாலும் கோள்களையும், மனித வாழ்க்கையையும் சம்மந்தப் படுத்தி யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ஜோதிடம்... என்பது வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களின் கருத்து. யூகங்கள் பெரும்பாலும் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம். இப்படி இருக்க ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பகுத்தறிவுள்ள நாம் சிந்திக்க வேண்டாமா? - இது பற்றி பார்ப்போம் என்று முடித்திருந்தேன்.

விளக்கம்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு குறள் – 423

ஒரு பொருளைப்பற்றி யார் கூறியிருந்தாலும், கூறியவர் படித்தவரா? படிக்காதவரா? வறியவரா? செல்வந்தரா? வயதில் அல்லது அனுபவத்தில் பெரியவரா? சிறியவரா? மகானா? பாமரனா? யார் கூறியிருந்தாலும், கூறியவரைப் பற்றி சிந்திக்காமல் கூறப்பட்ட பொருளின் உண்மைத் தண்மையை ஆராய்வதே அறிவுடைமை ஆகும்.

ஜோதிடத்தை எழுதியது பாபிலோனியர்களா? கிரேக்கர்களா? என்பதல்ல பிரச்சனை.

ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, யூகங்கள் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம், என்று வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களால் கூறப்பட்டதுதான் பிரச்சனை.

ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதைவிட, யூகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து எழுதப்பட்டது என்பதுதான் மிகச்சரியானது.

விஞ்ஞானம் அல்லது அறிவியலின் அடிப்படையே யூகங்கள்தானே?

யூகம் இல்லாமல் அறிவியல் ஏது? அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று யூகிக்காமல் எப்படி ஆய்வை மேற்கொண்டு தொடர முடியும்?

அணுவைத்துளைத்து எழுகடல் புகுத்தி குறுக தறித்த குறள் – என்ற ஒளவையாரின் யூகத்தின் விஸ்வரூபம்தானே இன்றைய அணு விஞ்ஞானம்.

இரவையும் ஒளிர வைக்க முடியும் என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் யூகத்தின் விளைவுதானே இன்றைய மெர்குரி, சோடியம் வேப்பர், நியான் இன்னும் பலவிதமான மின் விளக்குகள்.

தந்திக் கம்பி மூலம் பேசமுடியும் என்ற கிரகாம் பெல்லின் யூகத்தின் அபரிதமான வளர்ச்சிதானே இன்றைய செல்போன்.

இப்படி யூகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்றைய விஞ்ஞானிகளின் அதிகப் பொருட்செலவில் செய்யப்பட ஆய்வுகள் தோல்வியடைந்திருக்கின்றனவே! எனவே விஞ்ஞானம் என்பது சுத்த ஹம்பக் என்று கூறுவது சரியாகுமா? நியாயம்தான் ஆகுமா?

அதுபோல ஜோதிடத்தை மூடநம்பிக்கை, ஹம்பக் என்று கூறுவது சரியல்ல. நியாயமும் அல்ல.

விஞ்ஞானிகள் யூகித்தால் அது விஞ்ஞானம், பழங்கால முனிவர்களும், சித்தர்களும் யூகித்தால் அது வெறும் யூகம். இது சரியா?

பகுத்தறிவாளர்களே! தயவுசெய்து கொஞ்ஞ்ஞ்சம் சிந்தியுங்களேன்.

அடுத்தப் பதிவில்

சூரியன் நிலையானது, பூமி முதற்கொண்டு புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி போன்ற அனைத்து கோள்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன, என்று விஞ்ஞானம் கூறுகின்றது. இது ஆறாம் வகுப்புப் பாடம். ஆனால் ஜோதிடத்தில் சூரியன் முதற்கொண்டு அனைத்து கோள்களும் பூமியை சுற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்) ஆனால் ஜோதிடமோ கோள் என்கிறது. சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆனால் இதையும் கோள் என்றே ஜோதிடம் கூறுகிறது. இப்படி ஜோதிடத்தின் அடிப்படையே விஞ்ஞானத்திற்கு எதிராக இருக்கிறது. விஷயம் இப்படி இருக்க ஜோதிடத்தை விஞ்ஞானம் என்றே ஏற்றுக்கொள்ள முடியாது. நீரோ நுண்விஞ்ஞானம் என்கிறீர். வேடிக்கையாக இருக்கிறது. எப்படி ஏற்றுக்க்ள்ள முடியும்? - இதற்கு விளக்கம் காண்போம்

Saturday 3 August 2013

ஜோதிடம் என்றால்????????

பதிவு 3

சென்ற பதிவில்
சரி.... அப்படிஎன்றால் ஜோதிடத்தை அறிவியல் என்றுதானே கூற வேண்டும். நுண்விஞ்ஞானம் என்று கூறுவது எப்படி பொருந்தும்? என்று மீண்டும் யாரோ கேட்கிறார்கள்.

அவசரப்பட்டால் எப்படி? பொறுமையாக கட்டுரை முழுவதையும் படித்துவிட்டு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை பதில் தருகிறேன். என்று முடித்திருந்தேன்.

விளக்கம்

ஜோதிடம் நுண்விஞ்ஞானம் என்பதற்கு ஒரு ஆதாரம் தருகிறேன்.

ஒரு 100 CC – மோட்டார்சைக்கிள்-நல்ல நிலையில் உள்ளது- ஒன்றில், ஓட்டுவதில் அனுபவமும் திறமையும் உள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மற்றோரிடத்திற்க்கு செல்வதாக வைத்துக்கொள்வோம்.

வண்டியின் திறன், பெட்ரோலின் தன்மை, இடையில் ஓய்வு எடுக்கும் நேரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சீராக சென்றால் 5 மணி நேரத்தில் சென்றடைவார் என்று கூறுவது அறிவியல். இதைதான் அறிவியல் மூலம் கூற முடியும்.

ஆனால் இதனிலும் ஒரு படி மேலே போய் துவங்கிய பயணம் தடையின்றி முழுமையடையுமா? இடையில் தடை, தாமதம் ஏற்படுமா? என்பது பற்றியும் தெரிவிப்பது ஜோதிடம்.

எனவேதான் ஜோதிடம் அறிவியலை விட உயர்ந்து நுண் அறிவியலாக பரிணமித்து நிற்கிறது.

ஜோதிடம் மூடநம்பிக்கை, பயனற்றது என்று கூறுபவர்கள் நிச்சயமாக பகுத்தறிவாளர்களாகவோ,அறிவியலாளர்களாகவோ இருக்கமுடியாது. காரணம், இப்பூவுலகில் எந்த ஒரு பொருளையும் (Things (or) Subject (or) Concept) பயனற்றதாக இயற்கை அன்னை படைக்கவில்லை. ஒவ்வொரு பொருளும் ஏதாவதொரு விதத்தில் பயன்படும் என்பதே இயற்கையின் நியதி. உதாரணமாக பாம்பன விஷம்கூட விஷமுறிவுக்காகப் பயன்படுகிறது.

ஒரு பொருளைப்பற்றித் தெரிந்துகொள்லாமலேயே அதைப்பற்றி விமர்சிப்பவர்களை பகுத்தறிவுப் பாமரர்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஜோதிடம் மூடநம்பிக்கை, எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறுவது தற்காலத்தில் நாகரீகம் (fasion) ஆகிவிட்டது. உண்மையில் யார்யாரெல்லாம் ஜோதிடத்தை மூடநம்பிக்கை என்று கிண்டல், கேலி செய்கிறார்களோ அவர்கள் அனைவருமே ஜோதிடத்தை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள், - இது ஊரறிந்த, நாடறிந்த ரகசியம்.

ஜோதிடம் மூடனம்பிக்கை இல்லை, ஜோதிடம் பயனுள்ளது, ஜோதிடம் விஞ்ஞானதைவிட உயர்ந்தது.

அடுத்த பதிவில்

பண்டைய கிரேக்கர்களாலும், பபிலோனியர்களாலும், எகிப்தியர்களாலும் கோள்களையும், மனித வாழ்க்கையையும் சம்மந்தப் படுத்தி யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ஜோதிடம்... என்பது வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களின் கருத்து. யூகங்கள் பெரும்பாலும் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம். இப்படி இருக்க ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பகுத்தறிவுள்ள நாம் சிந்திக்க வேண்டாமா? - இதுபற்றி பார்ப்போம்

Friday 2 August 2013

ஜோதிடம் என்றால்??????

பதிவு 2

கடந்த பதிவில்

2. ஜோதிடத்தை சிலர் தெய்வீகக் கலை என்று சொல்கிறார்கள், சிலர் மூடநம்பிக்கை என்று சொல்லுகிறார்கள். மேற்படி கருத்தைப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்று சொல்வது போல தெரிகிறது. இன்றைய அறிவியல் கம்ப்யூட்டர், ராக்கெட், என்று எங்கோ போய்க்கொண்டிருக்கிறது, நீங்கள் ஜோதிடத்தை அறிவியல் என்று சொல்கிறீர்கள், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? பகுத்தறிவு உள்ள நாம் சிந்திக்க வேண்டாமா? என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.

இதற்கான விளக்கம்

இதே கேள்வியை நான் சற்று மாற்றி அமைக்கிறேன். ஜோதிடம் கலையா? விஞ்ஞானமா? அல்லது அஞ்ஞானமா ?

1. ஜோதிடம் கலையா?

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், ஜோதிடத்தை எதிர்ப்பவர்களும் ஜோதிடத்தை கலை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் ஜோதிடம் கலை அல்ல.

காரணம், கலை என்பது மெய், வாய், கண்,மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களால் உணர்ந்து ரசிக்கக் கூடியது.

உதாரணமாக, ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, சமையல் கலை என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வானவியல் (Astronomy)-ஐயும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. எனவே ஜோதிடம் கலை அல்ல.

பிறகு ஏன் காலங்காலமாக இன்று வரை ஜோதிடத்தை கலை என்று கூறி வருகின்றனர் என்ற ஒரு கேள்வி இங்கு எழலாம்.

இன்றைய அறிவியல் பாடங்களாகிய B.Sc (Bachelor of Science) Maths, Physics, Chemistry போனன்றவை சுமார் 45 - 50 ஆண்டுகளுக்கு முன் B.A (Bachelor of Arts) என்றுதான் வழங்கப்பட்டது. முன்பு கலையாக இருந்தவை இன்று அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அறிவியாலாளர்களும், கல்வியாளர்களும் ஜோதிடத்தை அறிவியலாக அங்கீகரிக்காமல் இருக்கின்றனர். காரணம் பகுத்தறிவு(?)தான்

இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்தால் ஜோதிடம் அறிவியல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்பது திண்ணம்.

ஜோதிடம் அஞ்ஞானமா? (மூடநம்பிக்கையா? அறிவீனமா?)

நிச்சயமாக ஜோதிடம் மூட நம்பிக்கை இல்லை. தனக்கு முன்னால் ஒரு திரையை வைத்துக் கொண்டு திரைக்கு பின்னால் எதுவுமே இல்லை என்று கூறுவதும், திரைக்கு பின்னால் ஏதேனும் (something) இருக்கலாம் என்ற அடிப்படை சந்தேகம் கூட எழாமல் திரைக்குப் பின்னால் ஒன்றுமே இல்லை என்று சாதிப்பதும், தனக்கு தெரியாத ஒரு பொருளை ( Subject or Concept) பொய், தவறு என்று விமர்சிப்பதுதான் அறிவீனம், மூட நம்பிக்கை, அஞ்ஞானம் ஆகும்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. குறள் - 355

அதாவது ஒரு பொருள் (Subject or Concept) எந்தத் தன்மை உடையதாக இருந்தாலும் அப்பொருளின் உண்மைத்தன்மை, ஆழம் (Reality and Depth) இவற்றை ஆராய்ந்து அறிதலே அறிவு என்பது வள்ளுவர் வாக்கு.

இந்த அடிப்படையில் ஜோதிடத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அடிப்படை கூட தெரியாமல் ஜோதிடத்தை பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் விமர்சிப்பது அறிவீனமே அன்றி அறிவுடமை ஆகாது.

ஜோதிடம் விஞ்ஞானமா? (அறிவியலா?)

இல்லை, அறிவியல் என்று தவறாக எழுதி விட்டேன். உண்மையில் ஜோதிடம் ஒரு நுண் அறிவியல் (Micro Science) என்பதே சரி.

ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... வேடிக்கையாக இருக்கிறது... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று யாரோ கேட்கிறார்கள்.

இந்த இடத்தில் அறிவியல் என்றால் என்ன? என்பது பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவியல் பற்றி அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் தனது Out of my later years -ல் கூறியிருப்பது.

Science is the attempt - to make the chaotic diversity of our sense experience - correspond to a logically uniform system of thoughts.

அதாவது ஒரு பொருளை (Subject or Concept) பகுத்து ஆராயும் போது கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட அனுபவங்களை, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தும் முயற்சியே அறிவியல் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் மனிதர்கள் உடற்கட்டமைப்பில் ஒத்திருந்தாலும் கல்வி, வாழ்க்கைத்தரம், குணாதிசயங்கள், உடலில் ஏற்படும் நோய்... போன்றவற்றில் வேறுபட்டிருக்க காரணம் என்ன? என்பது பற்றி ஜோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்களாகிய சித்தர்களும், ஞானிகளும் ஆய்வு செய்த பொழுது கிடைத்த தகவல்களை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தி தந்திருப்பதுதான் ஜோதிடம்.

சரி.... அப்படிஎன்றால் ஜோதிடத்தை அறிவியல் என்றுதானே கூற வேண்டும். நுண்விஞ்ஞானம் என்று கூறுவது எப்படி பொருந்தும்? என்று மீண்டும் யாரோ கேட்கிறார்கள்.

அவசரப்பட்டால் எப்படி? பொறுமையாக கட்டுரை முழுவதையும் படித்துவிட்டு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை பதில் தருகிறேன்.

அடுத்தப் பதிவில்

Thursday 1 August 2013

ஜோதிடம் என்றால் ????????

பதிவு 1

நான் இந்தப் பக்கத்தை உருவாக்கியதன் நோக்கம் ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

எனக்கு ஓரளவுக்கு ஜோதிடத்தில் பரிச்சயம் உண்டு.

1996 முதல் ஜோதிடத்தில் நிறைய ஆய்வுகள் செய்து இருக்கிறேன். '96 க்கு முன்பு எனக்கு ஜோதிடத்தில் ஈடுபாடு இருந்ததில்லை. ஜோதிடம் கற்க ஆரம்பித்த இரண்டு ஆண்டுகள் மற்ற ஜோதிடர்களைப் போல நானும் ஜோதிடத்தை சாதாரணமாகத்தான் நினைத்தேன்.

'98 ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Diplmo in Astrology படித்தேன் அப்பொழுது முதல் ஜோதிடத்தில் எனக்கு நிறைய சந்தேகம் ஏற்பட்டது.

ஜோதிடத்தில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும், என்னிடம் சில பகுத்தறிவாளர்கள் கேட்ட சந்தேகங்களையும் அடிப்படையாக வைத்து ஜோதிடத்தில் பல்வேறு ஆய்வுகள் செய்தேன்.

என் ஆய்வில் நான் தெரிந்து கொண்ட செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விகளையும், சில பகுத்தறிவாளர்களும் அறிவியல் ஆசிரியர்களாலும் என்னிடம் என்னிடம் கேட்ட கேள்விகளையும், ஒவ்வரு கேள்விக்கும் எனக்குத் தெரிந்த அளவுக்கு பதில் அல்லது விளக்கங்களை தொகுத்து தருகிறேன்.

இனி கேள்விகளை பார்ப்போம்....

1. ஜோதிடம் என்றால் என்ன?

ஜோதிஷம் என்ற வடமொழி சொல்லின் தமிழ் வடிவம்தான் ஜோதிடம் (தமிழாக்கம் அல்ல). இந்த ஜோதிஷம் என்ற சொல்லை ஜோதி + இஷம் என்று பிரித்தால்,

ஜோதி என்ற சொல்லுக்கு ஒளிக்கதிர் என்றும், இஷம் என்ற சொல்லுக்கு, அறிவியல், வேதியியல், இயற்பியல், கணக்கியல் போன்ற சொற்களின் இறுதியில் வரும் இயல் என்ற பொருளும் வரும்.

இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஒளிக்கதிரியல் என்று பொருள் கிடைக்கும்.

அதாவது சந்திரன், செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் சூரியனிலிருந்து வரும் கதிர்களை வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தி பிரதிபலிக்கும் கதிர்கள், பூமியில் மனிதர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது, என்பது குறித்த விஞ்ஞானம் ஆகும்.

2. ஜோதிடத்தை சிலர் தெய்வீகக் கலை என்று சொல்கிறார்கள், சிலர் மூடநம்பிக்கை என்று சொல்லுகிறார்கள். மேற்படி கருத்தைப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்று சொல்வது போல தெரிகிறது. இன்றைய அறிவியல் கம்ப்யூட்டர், ராக்கெட், என்று எங்கோ போய்க்கொண்டிருக்கிறது, நீங்கள் ஜோதிடத்தை அறிவியல் என்று சொல்கிறீர்கள், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? பகுத்தறிவு உள்ள நாம் சிந்திக்க வேண்டாமா?

இந்தக் கேள்விக்கு அடுத்த பதிவில் விளக்கம் தருகிறேன்.

Tuesday 19 February 2013

தாயன்பும், பிள்ளையன்பும்



ஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.

ஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.

முதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.

"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா?"
இந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு.

 "எங்கே ....முடியாது" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ?" என்று பயந்த கழுகுக் குஞ்சு, "நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக அற்பனிப்பேன்" என்றது. அதன் நடுக்கமான குரலில் இருந்தே, "குஞ்சு சொல்வது தன மீதுள்ள பயத்தினாலேயே தவிர, உண்மையாக அல்ல" என்பதை புரிந்துகொண்ட கழுகு, தனது குஞ்சை சுமந்து போய் மரம் ஒன்றின் மேல் பத்திரமாக விட்டு விட்டு திரும்பியது. பிறகு, இரண்டாவது குஞ்சியிடமும் இதே கேள்வியை கேட்டது. அதுவும் இதையே சொல்ல, அதையும் பத்திரமாக விட்டு விட்டு வந்தது.
இப்போது மூன்றாவது குஞ்சை தூக்கிக்கொண்டு பறந்த கழுகு, அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. மூன்றாவது குஞ்சு கோபத்தில் கொதித்தது. " உனக்கு இந்த சுயநலம் எங்கிருந்து வந்தது.? எப்படி, உன் குழந்தைகள் மீது உனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாத அளவிட முடியாத பாசம் உள்ளதோ, அதே போன்று எனக்கும் என் குழந்தைகள் மீதுதான் பாசம் இருக்கும். என் தாயான உன் மீது எனக்கு அன்பு உள்ளது. என்னை வளர்க்க நீ பட்ட பாடு எல்லாம் நானறிவேன். அதற்கான நன்றி உணர்ச்சியும் எனக்கு உண்டு. எனவே, தேவைப்படும்போது உனக்கு என்னாலான உதவியை அவசியம் செய்வேன். ஆனால், என் குழந்தைகள் மீது எனக்குள் இயற்கையாக பெருகும் பாசத்துக்கு ஈடு-இணையே கிடையாது" என்றது தாய்க் கழுகை நோக்கி.

அதன் சொற்களில் இருந்த உண்மை தாய்க் கழுகின் உள்ளத்தை தொட்டது. தன குஞ்சை முத்தமிட்ட கழுகு, பெருமிதத்துடன் அதை அனைத்துக் கொண்டு, தங்களது எதிர்காலத்தை நோக்கி பறந்தது.



உலக இயல்பு இப்படி இருக்க, பிள்ளைகளையும் நம் போல் எண்ணி, அவர்களிடம் நமக்கு மட்டுமே முழு அன்பையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.


ஒரே ஒரு முறைத்தான் வாழப்போகிறோம், அதில் இந்த தலைமுறையுடன் சிறப்பாக வாழ கற்றுக்கொள்வோம்

எஜமானனின் அன்பு


பணக்காரன் ஒருவனது தோட்டத்தில் தோட்டக்காரர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். ஒருவன் சோம்பேறி, வேலை செய்வதில் விருப்பம் இல்லாதவன். எஜமான் தோட்டத்துக்கு வரும் போதெல்லாம் ஓடோடிச் சென்று கூப்பிய கரங்களுடன் குழைந்து நிற்பான்.

இன்னொருவன் அதிகம் பேசுவதில்லை. கடுமையாக உழைப்பான். பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, எஜமான் வீட்டுக்குச் சுமந்து செல்வான். இந்த இருவரில், எஜமானின் அன்பு யாருக்குக் கிடைக்கும்?

கடவுள்தான் எஜமான். இந்த உலகமே அவருடைய தோட்டம். இங்கே இருவகை மக்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் சோம்பேறிகள்; ஏமாற்றுக்காரர்கள். இறைவனின் அழகையும், பண்பு நலன்களையும் புகழ்பவர்கள்.

மற்றொரு வகையினர், பலவீனமான மனிதர்க்கும், ஆண்டவன் படைத்த அனைத்து உயிர்களுக்கும் கைம்மாறு கருதாமல் உழைத்துத் தொண்டாற்றுபவர்கள்.

இறைவனின் அன்புக்கு உரியவர்கள். பிறர் நலனுக்காகச் செயல்படுபவர்களே! கருத்தாழம் மிக்க இந்த விளக்கத்தை நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

பலன் கருதாமல் இறைவனுக்கும், பரம்பொருளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் தங்கள் செய்கையால் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமே அன்றி, சும்மா இருத்தல் தகாது என்கிறது நம் சமயம்.

நான், எனது என்ற உடமை-மனோபாவம் உள்ளவர்களால் நிம்மதியான வாழ்க்கையை எந்த நாளும் நடத்த முடியாது. நிம்மதியும், அமைதியும் ஆயுள்வரை நீடிக்க, விளைவுகளில் நாட்டம் செலுத்தாமல், செயல்களில் ஈஸ்வர அர்ப்பணத்துடன் ஈடுபட வேண்டும்.

மனிதன் உயிரைப் பாதுகாக்க விரும்பினால், அதில் எப்போதும் இயக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். கர்மம் செய்யாமல் மனிதன் அரை கணமேனும் இருக்க முடியாது. ‘நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது விதி’ என்கிறார் மகாகவி பாரதி.